Tuesday, November 25, 2008

உத்தமம் வேங்கடரங்கன் பேட்டி

இணையத்தில் தமிழ் பெற்றுள்ள ஏற்றம், எழுத்துருவைச் சீரமைப்பதில் ஏற்பட்ட பல்வேறு கருத்துக்குழுக்கள், இன்று யூனிக்கோடு எவ்வகையில் உதவுகிறது என்பது குறித்த விவரம், விசைப்பலகை என்றால் என்ன, விசைப்பலகைகள் மாறுபட்டு அமைந்தது ஏன், ஆங்கிலத்தில் விசைப்பலகையின் ஒருசீர்மை, தமிழில் அத்தகைய ஒருசீர்மைக்கு யூனிக்கோடு எங்ஙனம் உதவுகிறது என்பது பற்றிய ஆய்வு, இன்றைய இளைஞர்கள் கணினித்துறையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இணையத்தில் நிகழும் பல்வேறு மோசடிகள், அவற்றைச் சமாளிக்கும் விதம், டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன, பணவரவு செலவில் அதன் பயன்பாடு யாது, இணைய வானொலி, இணையத் தொலைக்காட்சி ஆகியவை பெற்றுள்ள தனிச்சிறப்புகள், எதிர்காலத்தில் இணையம் பெறப்போகும் வளர்ச்சி, வலைப்பூக்களில் தமிழ் பெற்றுள்ள சிறப்பிடம்...

கணிப்பொறியாளர்கள் கைகட்டிச்சேவகம் செய்யவேண்டியதில்லை என்பதற்குத் தாங்களும் தங்களுக்கு முன்னரும் பின்னரும் வந்த தொழில் முனைவோர்கள் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டிக்காட்டினீர்கள்.ஒபாமாவின் வருகையால் நமக்கு எவ்வித அச்சமும் இல்லை என்பதைச்சுட்டி அமெரிக்காவைப் பூச்சாண்டி காட்டிவருவோரின் அழிம்புக்கு முற்றுப்புள்ளி வைத்தீர்கள். தமிழக அரசு இதுவரை அளித்துவந்த ஒத்துழைப்புக்கு உத்தமத்தின் சார்பில் நன்றி தெரிவித்தீர்கள். இந்த அல்லது அடுத்த ஆண்டில் இணையமாநாடு நடத்தவேண்டிய சூழலை எடுத்துரைக்கத்தவறவில்லை.

முனைவர் மறைமலை இலக்குவனார்.

Thursday, November 20, 2008

மாபலிபுரம் கோயிலருகே அழிவு!

Saturday, November 1, 2008

ஆசை முகமறந்து போச்சே!

கண்ணன் என் காதலன்

ஆசை முகமறந்து போச்சே - இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகமறக்க லாமோ?
கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ண னழகு முழுதில்ûல்
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.
ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்
உறவை நினைத்திருக்கு முள்ளம்;
வாயு முரைப்பதுண்டு கண்டாய் - அந்த
மாயன் புகழினையெப் போதும்.
கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு;
பெண்க ளினத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் - இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டா?
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி?

(சுப்பிரமணிய பாரதி)

தீராத விளையாட்டுப் பிள்ளை - நாட்டியம்

தெய்வத்தைக் குழந்தையாக வைத்துக் கும்பிடுவானேன்? என்றொரு கேள்வி எழுகிறது. சின்ன பதில், நடைமுறையில் காணும் காட்சியில் உள்ளது. குழந்தை கள்ளமற்றது. அம்மா, அடித்தாலும், மீண்டும் வஞ்சனை இல்லாமல் அம்மாவிடமே வந்து ஒட்டுவது! இதனால்தான் "குழந்தையும் தெய்வமும்" ஒன்று என்றனர். இறைவன் பரவஸ்துவாக, பராக்கிரமனாக, தனது விஸ்வரூபம் காட்டினால் வீராதி வீரர்க்ள் கூட (உம்.விஜயன்) பயந்துவிடுவர். அவனே கண்ணனாகக் கீழிறங்கி (அவதாரம்) வந்தால் நாமெல்லாம் அவனிடம் அண்ட முடிகிறது. கண்ணனைத் தோழனாக, சகாவாகப் பார்க்கமுடிகிறது. இப்படி அவன் கீழிறங்கி வந்தால்தான் நமக்கு கதி. இல்லையெனில் நாம் எக்காலத்தில், யோகம், நியமம் கற்று, மலங்களை அகற்றி சுத்த ஜீவனாய் அவனிடம் போவது?

பாரதியின் தீராத விளையாட்டுப்பிள்ளை, கண்ணனின் பாலலீலைகளைப் படம் பிடிக்கும் அற்புதப்பாடல். இப்பாடலுக்கு இப்படிக்கூட பாவமிடமுடியுமா எனச் சவால் விடுகிறார் நர்தகி ராஜஸ்ரீ கிருஷ்ணன். இயக்கம் சங்கர் கந்தசாமி! கண்டு ரசியுங்கள்.

கண்ணனை சற்குருவாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அவனை நண்பனாக, தாயாக, காதலியாக, ஏன் வேலைக்காரனாகக் கூடப் பார்த்து அனுபவித்து இருக்கிறார் பாரதி!!


Friday, October 31, 2008

தெற்கும் மேற்கும் சேர்ந்து வடக்கு நோக்கி

ஊத்துக்காடு வேங்கடசுப்பிரமணி ஐயரின், தோடி ராகக் கீர்த்தனையான

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)!*

எனும் பாடல் மிகப்பிரபலமானது. இப்பாடல், மேற்கத்திய இசைக் கலப்புடன், வட இந்திய நடிகையான ஷோபனா அஸ்மி பாடுவதாக, "காலை ராகம்" எனும் ஆங்கிலப்படத்தில் இடம் பெறுகிறது! உலகம் ஓர் கிராமம் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?



ராகம்: தோடி
தாளம்: ஆதி
ஆ - ஸரிகமபதநிஸ்
அ - ஸநிதபமகரிஸ

பல்லவி

தாயே! யசோதே! - உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே)

அனுபல்லவி

தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே - இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே)

சரணம்

1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க - முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்!
காலசைவும் - கையசைவும் - தாளமோடிசைந்து வர
நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்!
பாலனென்று தாலியணைத்தேன்! - அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் - வாயில் முத்தமிட்டாண்டீ!
பாலனல்லடி! உன்மகன் - ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன்
நாலுபேர்கள் கேட்கச் சொல்ல - நாணமிக வாகுதடீ! (தாயே)

2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும்
அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே - கண்ணன்
தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை - அந்த
விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே!
நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி
சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ
நந்தகோபற்கிந்தவிதம் - அந்தமிகு பிள்ளைபெற
நல்லதவம் செய்தாரடி - நாங்கள் என்ன செய்வோமடி (தாயே)

3. எங்கள்மனை வாழவந்த - நங்கையைத் தன்னம் தனியாய்
துங்க யமுனாநதிப் போகையிலே - கண்ணன்
சங்கையுமில்லாதபடி - பங்கயக் கண்ணால் மயக்கி
எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான்
"உங்கள்மகன் நான் என்றான்! - சொல்லி நின்றபின்
தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான்
இங்கிவனைக் கண்டு இள - நங்கையரைப் பெற்றவர்கள்
ஏங்கி - எண்ணித் தவிக்கின்றார்! - நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே)

4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற
விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்!
கட்டின கன்றை யவிழ்த்து - எட்டியும் ஒளித்துவிட்டு
மட்டிலாத் தும்பை கழுத்தில் - மாட்டிக் கொண்டான்!
விட்டு விட்டு - "அம்மே" என்றான் கன்றினைப் போலே
அட்டியில்லாத மாடும் "அம்மா" என்றதே!
கிட்டின குவளையோடும் எட்டினால் "உன் செல்வமகன்!"
பட்டியில் கறவையிடம் - பாலை யூட்டுறானடீ! (தாயே)

5. சுற்றி சுற்றி என்னை வந்து - அத்தை வீட்டு வழி கேட்டான்
சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன்
அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான்
அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன்
வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!!
முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ
அத்தனை இடம் கொடுத்து - மெத்தவும் வளர்த்து விட்டாய்!
இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே)

6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு
பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்!
வண்ணமாய் நிருத்தமாடி - மண்ணினைப் பதத்தால் எற்றிக்
கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்!
பண்ணிசையும் குழலூதினான்! - கேட்டு நின்ற
பண்பிலே அருகில் வந்து - வம்புகள் செய்தான்!
பெண்ணினத்துக்கென்று வந்த - புண்ணியங்கள் கோடி கோடி
எண்ணீ உனக்காகுமடி - கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!)

7. முந்தாநாள் - அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து
வித்தைகள் பலவும் செய்து விளையாடினான்
பந்தளவாகிலும் வெண்ணை - தந்தால் விடுவேனென்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாஸுதேவன் இவன்தான் - அடி யசோதே!
மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால்
சுந்தர முகத்தைக் கண்டு - சிந்தையுமயங்கு நேரம்
அந்தர வைகுந்தமோடு - எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!)

Thursday, October 30, 2008

தீராத விளையாட்டுப் பிள்ளை - பாரதி

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை

(தீராத)

தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(தீராத)

அழகுள்ள மலர் கொண்டு வந்தே - என்னை
அழ அழச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்

(தீராத)

பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புதுச் சேலை தனிலே - புழுதி
வாரிச் சொறிந்தே வருத்திக் குலைப்பான்

(தீராத)

புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித் ததும்பு நல் கீதம் படைப்பான்
கள்ளால் மயங்குவது போலே - அதனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்

(தீராத)

Monday, October 20, 2008

டைரக்டர் ஸ்ரீதர் மறைவு

தமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.

நன்றி : தினத்தந்தி செய்தி


Wednesday, October 15, 2008

தனி ஆவர்த்தனம்

Smt. M.L. Vasanthakumari (Vocal), Smt. Meena Subramaniam (Vocal support), Smt. A. Kanyakumari (Violin), Thiruvarur Shri Bhaktavatsalam (Mridangam), Shri G. Harishankar (Kanjira), Shri E. M. Subramaniam (Ghatam)

For more video of Thiruvarur Bhaktavatsalam, visit www.torontobrothers.com.


Monday, October 13, 2008

உத்தரமேரூர் கோவில் புனரமைப்பு

இத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்கள் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே! தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்," என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.

'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.

--
Regards
Chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com


Thursday, September 11, 2008

கேரள அம்பல வாத்தியம்

Tuesday, September 9, 2008

குன்னக்குடியின் வண்ணம்

Colours:

The album is a fusion of mainly two instruments, tabla and violin. Ustad Zakir Hussain is on the tabla and the violin is played by Kunnakudi Vaidyanathan. The album is a perfect blend of Western, Hindustani and Carnatic classical music.. A. R. Rahman has assisted Ustad Zakir Hussain and Kunnakudi Vaidyanathan on their World tours as Keyboard player. At that time his name was Dileep. Later this concert was converted to album named "Colours-Golden Krithis". C. Jeyasekar was the music director. Album Credits Violin : Kunnakudi Vaidyanathan Tabla : Zakir Hussain Music Orchestration, Arrangements, Conducting : C Jeyasekar Keyboards : A. S. Dileep Kumar (A.R. Rahman) Drums, Percussion : Sivamani Mridangam : Srinivasan String section : Kalyan

Kunnakudi Vaidyanathan is dead - Hindu News

Friday, September 5, 2008

தென்னக கோயில் குடும்ப வைபவம்

குடும்பங்கள் வேண்டுதலின் பேரில் கோயிலில் வைத்து சடங்குகள் நடத்துவது தொன்று தொட்டு நடந்துவரும் வழக்கம். கெம்ப்தூர் எனும் ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அவ்வூரைச் சார்ந்த காமத் குடும்பத்தினர் கூடி நடத்தும் ஓர் நிகழ்வு இங்கு பதிவாகியுள்ளது. பண்டைய வேத நெறிப்படி தீ வளர்த்து, ஹோமம் செய்வது காணக்கிடைக்கிறது. பெண்கள் பூ கட்டுவது, சமையலறை என்று கிராமத்து சூழலை அப்படியே படம் பிடிக்கிறது இந்த நிகழ்கலை. இது தென்னக கர்நாடக மாநிலத்தில் நடைபெறுகிறது

Friday, August 29, 2008

"இலக்கப்பாடி" சுபாஷினி பேட்டி (2004 -Sun டிவி)

Friday, August 22, 2008

திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 2

திரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் - 1

Tuesday, July 1, 2008

இந்திய தரிசனம் (1)

இந்திய தரிசனம் (2)

இந்திய தரிசனம் (3)

இந்திய தரிசனம் (4)

இந்திய தரிசனம் (5)

Monday, June 30, 2008

இந்திய வானவியல் | கார்ல் சாகன்



Carl Sagan Portal

Carl Edward Sagan - Wikipedia

இந்திய வானவியல் பற்றிய சிறு ஆவணப்படம். உலகின் மிகப்பிரபல வானவியல் இயற்பியல் வல்லுநர் கார்ல்சாகன் வழங்குகிறார்.

கார்ல்சாகன் வலுவான லோகாதேயர். இறை நம்பிக்கை அற்றவர். ஜோதிடத்தைப் புறக்கணிப்பவர். இவ்வளவு இருந்தும் அவரைத் தில்லைக் கூத்தன் சந்நிதி இழுத்திருக்கிறது! இந்திய வானவியல் எவ்வளவு அருகே நவீன வானவியல் புரிதலுடன் ஒத்துப் போகிறது என்று சிலாக்கிறார் கார்ல்சாகன். ஆயினும் மேலைத்தவருக்கேயுரிய நக்கலுடன் இந்த ஒற்றுமை அறிவின் பாற்பட்டதல்ல, வெறும் coincidence (தற்செயலானது) என்று இந்திய அறிவியலைப் புறந்தள்ளிவிடுகிறார். ஆங்கிலக் காலனித்துவத்தால் இந்தியா இழந்தது எவ்வளவோ. அதில் நம் வேர்கள் பற்றிய எந்த விதப் புரிதலும் இல்லாமல் ஆங்கில வழியில் சிந்திப்பது பெரிய இழப்பு. இம்மாதிரி ஆவணங்கள் அதற்கு வழிவகுக்கின்றன. இந்தியத் தத்துவம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் புரிந்து கொண்டு பேசுகிறார். நம்மவர் இம்மாதிரி ஆவணப்படங்கள் எடுத்து உலகிற்குச் சொன்னால் ஒழிய நம் பெருமை யாருக்கும் தெரியாது!

Sunday, June 29, 2008

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்!



பாடல்: ரகுவம்ச சுதா
ராகம்: கதன குதூகலம்
தாளம்: ஆதி
கருவி: Mouth organ | வாய் யாழ்
முழுப்பாடல் காண! இங்கே சொடுக்குக!

Saturday, June 28, 2008

காவடிச் சிந்து | அருணா சாயிராம்

மாடு மேய்க்கும் கண்ணே! நீ போக வேண்டாம் சொன்னேன்!



பல்லவி:

யசோதை:

மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------
ராகம்=குறிஞ்சி

Friday, June 27, 2008

அதிசயக் குழந்தை (1)

அதிசயக் குழந்தை (2)



வாழ்வின் புரியாத புதிர்களில் ஒன்று மரணத்திற்குப் பின் என்ன? மறு ஜென்மம் உண்டா? என்பது!

இங்குதான் கண்டவர் விண்டதில்லை சமாச்சாரம் வருகிறது, ஏனெனில் நமக்கு போன ஜென்மத்தில் என்ன செய்தோம் என்று ஞாபகம் வருவதில்லை.

மறுஜென்மம் உண்டு என்று சொல்ல வரும் நிகழ்வு இன்று நிகழ்கலையில்.

ஒரு சின்ன வாண்டு ராகங்களைப் பட்டு, பட்டு என்று கண்டு சொல்கிறது! பாம்பே ஜெயஸ்ரீ சொல்வது போல் அவர் ஒரு ராகம் எடுத்து, அடுத்த ராகம் யோசிப்பதற்குள் இது சொல்லிவிட, அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுப்பதில்லை இச்சிறுமி!

பச்சிளம் மாறாத முகம். கொட்டாவி விடுகிறது. கழுத்து செயினை நமண்டுகிறது. காது மட்டும் என்ன ராகம் என்பதில். ஆனால் குரலிலிருந்து ராகம் புறப்படும் போதே இவளிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்படும் போல..

கர்நாடக இசை| வயலின் (1)



எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது புதல்வி நர்மதா அவர்கள் இசைக்கும் வயலின் இசை. வயலின் தமிழிசைக்கு முத்துசாமி தீக்ஷ்தர் அவர்கள் குடும்பம் மூலமாக நுழைகிறது. மேலை வாத்தியமான அதை நம்மவர்கள் செல்ல நாய்குட்டிபோல் இவர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும்படி செய்துவிட்டது அதிசயம்தான்! நல்லவேளையாக நின்று கொண்டு வாசிக்காமல் உட்கார்ந்து வாசிக்கிறார்கள் (அதுவும் நம் adaptation தான்).

கர்நாடக இசை| வயலின் (2)

எம்.எஸ்.ஜி & நர்மதா

Thursday, June 26, 2008

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (1)



ஜி.என்.பி என்று மக்களால் சுருக்கமாக அழைக்கப்பட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம் ஓர் இசைப்புயல். இதை நான் சொல்லவில்லை, பிறவிப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணா சொல்கிறார். இவர் காலங்களில் கர்நாடக இசை என்பது திரைக்குச் சென்று, பின் திரை மூலமாகப் பிரபலமாகி மீண்டும் இசைத்துறைக்குத் திரும்புவதைக் காணலாம். இன்றளவும் திரையில் பாடிய பாடகர்கள் கச்சேரிகளுக்கு கூட்டம் கூடுதலே. ஜி.என்.பி 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் பற்றிய ஆவணப்படம் நம் நிகழ்கலைக்கு பத்மநாப ஐயர் (லண்டன்) புண்ணியத்தில் வந்து சேர்கிறது!

ஜி.என்.பாலசுப்பிரமணியம் | ஆவணம் (2)



புரியாத புதிர்: தமிழர்கள் ஏன் பேட்டிகளில் இப்படி ஆங்கிலத்தில் கபடி விளையாடுகிறார்கள்?

Wednesday, June 25, 2008

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (4)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (3)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (2)

டி.வி.கோபாலகிருஷ்ணன் | நேர்காணல் (1)

Tuesday, June 24, 2008

செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர்



இன்று கர்நாடக சங்கீதம் என்று அறியப்படும் தமிழ் இசை சங்ககாலத்திலேயே வளர்ச்சியுற்று சிறப்புற்றிருந்ததை சிலம்பு செப்பும். கால ஓட்டத்தில் இவ்விசை பல்வேறு கூறுகளை இந்திய இசைப் பாரம்பரியங்களிலிருந்து எடுத்து வளர்ந்திருக்கிறது. இனிமேல் இதைத் திராவிட இசை என்றுதான் சொல்ல வேண்டும், ஏனெனில் இதன் சாகித்யங்கள் தெலுங்கிலும், கன்னடாவிலும், மலையாளத்திலும், தமிழிலும் அமைந்துள்ளன. வடமொழி பயிற்சியுள்ள பல சாகித்ய கர்த்தாக்கள் சமிஸ்கிருதத்தில் எழுதி இதை வளப்படுத்தியுள்ளனர். இதன் சமகாலப் பரிமாணம் இன்னுமொரு இந்திய ஒற்றுமை படிநிலையில் (pan Indian) நிற்கிறது. ஹிந்தி பஜன், மராட்டிய அபங், ஹிந்துஸ்தானி கzhaல் போன்றவை சமகாலப் பாடர்களால் நிறைய பாடப்படுகின்றன. இதையும் ஒருபடி தாண்டி அது சர்வ தேச முகமொன்றும் கொண்டுள்ளது. அதுதான் Fusion music என்பது. வெளிநாடு செல்வதென்பது பக்கத்து ஊருக்குச் செல்வது போல் ஆகிவிட்ட நிலையில் இவ்விசைக் கலைஞர்கள் வெளிநாட்டுக் குழுக்களுடன் சேர்ந்து பல கலப்பு சங்கீதத்தைத் தருகின்றனர். பக்தி இயக்கம் போல் தமிழ் மண்ணில் பிறந்த இந்த இசை ஒரு முழு உலகப்பரிமாணம் கொண்ட இசையாக மாறிவிட்டது. சினிமாவின் தாக்கமும் இதில் இப்போது சேர்ந்துள்ளது.

சமகால கச்சேரி பந்தா என்பதை அரியக்குடி இராமானுஜ அய்யங்கார் ஆரம்பித்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து பல பிரபல இசைக்கலைஞர்கள் இதை வளர்த்தெடுத்துள்ளனர். அரியக்குடியின் சிஷ்யர்களுல் ஒருவரான நாராயணசாமி ஐயர் போன்ரோரின் சமகாலத்தவர் செம்மங்குடி. இப்போது வாழும் கலைஞர்களில் மூத்த இசைஞர். இவர் தந்திருக்கும் ஒரு நேர்காணல் இன்று இடம் பெறுகிறது. முக்கியமாக இசையைக் காசுக்கு சொல்லிக்கொடுக்கக்கூடாது என்று ஒரு கருத்தை இவர் முன்வைக்கிறார். இது கல்வி பற்றி டாக்டர் இராதாகிருஷ்ணன் சொன்ன கருத்தோடு ஒத்துப்போகிறது!

இவர் பற்றிய குறிப்புகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. அவை...

Seenu - as he was called in his younger days was born on 25th July 1908 to Sri Radhakrishna Iyer and Smt Dharmasamvardhini Ammal in a small village called Semmangudi in Tanjore district. Even as a child, he showed keen interest in music. He would repeat the music he heard. His maternal uncle, Sri Thirukodikaval Fiddle Krishna Iyer was already in the lime light as a successful musician. His cousin and Sri Krishna Iyer's son-in-law Sri Narayanaswamy Iyer was beginning to taste success as a musician.

So, Radhakrishna Iyer decided that his son would follow his uncle and cousin and become a musician. Little boy Seenu's formal music training started on the Vijayadasami day of 1917 under cousin, Sri Narayana Swamy who was also living in Semmangudi.


மேலும் அறிய...

Monday, June 23, 2008

மங்கள இசை | சுவாமி புறப்பாடு



ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் .

நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்.

காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்)

* காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி, நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை.
* காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோகினி, சுத்த தனயாசி.
* காலை 8.00 - 10.00 தன்யாசி, அசாவேரி, சாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோகரி.
* காலை 10.00 - 12.00 சுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன சாரங்கா, தர்பார்.
* பகல் 12.00 - 2.00 சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்லார்.
* பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உசேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, அம்சாநந்தி, மந்தாரி.
* மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வசந்தா, லலிதா, சரசுவதி, சீலாங்கி, கல்யாணி.
* மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரகரப்பிரியா, பைரவம், நாராயணி, அம்சதுவனி. கெளளை.
* இரவு 8.00 - 10.00 காம்போதி, சண்முகப்பிரியா, தோடி, நடபைரவி, அரிகாம்போதி, கமாசு, ரஞ்சனி.
* இரவு 10.00 - 12.00 சிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகலகாம்போதி.
* இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பியாகடை, சாமா, வராளி, தர்மவதி.
* இரவு 2.00 - 4.00 ஏமாவதி, இந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேசுவரி, மோகனம்.

விழாக்கால வீதிஉலாக்களில் கோயில் உள்ளும் வெளியிலும் இசைக்கவேண்டிய முறைகள்

* மண்டகப்படி தீபாராதனை.

1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* புறப்பாடு
1. புறப்பாடு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாள மன்னியில் மற்ற தாளங்களில் மல்லரிகள்.
* யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
* யாகசாலை முதல் கோபுரவாசல் வரை - திருபுடைதாள மல்லரி.
* கோபுரவாசல் முதல் தேரடிவரை - இதர மல்லரிகளும் வர்ணமும்.
* தேரடியிலிருந்து தெற்குரதவீதி பாதி வரை - ராகம்.
* தெற்குரதவீதி பாதி முதல் மேலரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
* மேலைரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கிர்த்தனைகள்.
* ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
* தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
* கோயிலுக்குள் - துரிதகால திரிபுடைதாள மல்லரிகள்.
* தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
* எதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.

விழாக்காலங்களில் கொடிஏற்றத்தினன்றும் கொடி இறக்கத்தினன்றும் நவசந்திகளில் இசைக்க வேண்டிய பண் முறைகள்

* பிரம சந்தி - மத்தி - பைரவி.
* இந்தர சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
* அக்கினி சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
* இயம சந்தி - தெற்கு - தசாட்சரீ.
* நிருதி சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரிய.
* வருண சந்தி - மேற்கு - வராளி.
* வாயு சந்தி - வடமேற்கு - வேளாவளி.
* குபேர சந்தி - வடக்கு - ராமகலீ.
* ஈசான சந்தி - வட கிழக்கு - பிலகரி.

Sunday, June 22, 2008

ஜலதரங்கம் - நீரின் இசை



Jalatarangam-vatapi by Nemani Somayajulu
Vatapi-Hamsadvani-Adi-Deekshitar

இசை: நீமணி சோமயாஜுலு
பாட்டு: வாதாபி கணபதிம்
ராகம்: ஹம்சத்தொணி
சாகித்யம்: தீட்சிதர்

Saturday, June 21, 2008

இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி



பாவயாமி கோபால பாலம்!

Artist: Subbulakshmi M S
Ragam: Yamunakalyani
Thalam: Aadi
Composer: Annamacharya
Album: Subbulakshmi MS Live


raagam: yamunaa kalyaaNi

65 mEcakalyaaNi janya
Aa: S R2 G3 P M2 P D2 S
Av: S D2 P M2 P G3 R2 S

taaLam: khaNDa caapu
Composer: Annamaacaarya
Language:

pallavi

bhAvayAmi gOpAlabAlam manas-sEvitam tatpadam cintayEham sadA

caraNam 1

ghaTi ghaTita mEkhalA kacitamaNi khaNDikA paTala nina dEna viprAjamAnam
kuTila pada khaTita samkula simjitE natam caTula naTanA samujvala vilAsam

caraNam 2

niratakara kalita navanItam brahmAdi sura nikara bhAvanA shObhita padam
tiruvEnkaTAcala stitam anupam harim parama puruSam gOpAlabAlam

குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா!

Artist: Subbulakshmi M S
Ragam: Raagamaalika
Composer: Rajaji
Album: Kalki Golden Jubilee Golden Collection


raagam: raagamaalika (poem is sung in various raagams)
taaLam: usually aadi
Composer: Raajaaji
Language: Tamil

Pallavi shiva ranjani

22 kharaharapriya janya
Aa: S R2 G2 P D2 S
Av: S D2 P G2 R2 S


kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
kuRai onRum illai kaNNaa
kuRai onRum illai GOvinthaa

Anupallavi shiva ranjani

kaNNukku Theriyaamal niRkinRaay kaNNaa
kaNNukku Theriyaamal ninRaalum enakku
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa


CaraNam 1 shiva ranjani

VEndiyathai thanNthida VEnkaTEsan enRirukka
VEndiyathu VERillai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa


CaraNam 2 kaapi

22 kharaharapriya janya
Aa: S R2 M1 P N3 S
Av: S N2 D2 N2 P M1 G2 R2 S


thiraiyin pin niRkinRaay kaNNaa - unnai
maRai Othum NYaaniyar mattuME kaaNpaar
enRaalum kuRai onRum enakkillai kaNNaa


CaraNam 3 kaapi

kunRin MEl kallaaki niRkinRa varathaa
kuRai onRum illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa


CaraNam 4 sindu bhairavi

10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S


kalinNaaLukkiranNgi kallilE iRangi
nilaiyaaga KOvilil niRkinRaay KEsavaa


CaraNam 5 sindu bhairavi

yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
Ethum thara niRkum karuNai kadal annai
enRum irunthida Ethu kuRai enakku
onRum kuRai illai maRaiMoorththi kaNNaa
maNivaNNaa malaiappaa GOvinthaa GOvinthaa

Friday, June 20, 2008

ரங்க விமான வைபவம்!



இசை: ரஜனி & காயத்திரி
பாடல்: முத்துசுவாமி தீட்சிதர்
ராகம்: பிருந்தாவன சாரங்கா
இடம்: திருவரங்கம், பவித்ரோத்சவம், ஆகஸ்ட்டு, 28th 2007

இப்பாடலின் மூல வடிவம் காண, இங்கே சொடுக்குக!


raNgapura vihaara
raagam: brindaavana saaranga

22 kharaharapriya janya
Aa: S R2 M1 P N3 S
Av: S N2 P M1 R2 G2 R2 S


taaLam: roopakam
Composer: Muttuswaamee Dikshitar
Language: Sanskrit

pallavi

raHNgapura vihAra jaya kOdaNDarAmAvatAra raghuvIra shrI

anupallavi

aHNgaja janaka dEva bRndAvana sAraHNgEndra varada ramAntaraHNga shyAma
lAHNga vihaHNga turaHNga sadayApAHNga satsaHNga

caraNam

paHNkajAptakula jalanidhi sOma vara paHNkaja mukha paTTAbhirAma
padapaHNkaja jitakAma raghurAma vAmAHNka gata sItAvara
vESa shESAHNka shayana bhakta santOSa ENAHNkaravi nayana mRdutarabhASa
akaLaHNka darpaNa kapOla vishESa munisankaTa
haraNa gOvinda vENkaTa ramaNa mukunda saHNkarSaNa mUla kanda shaHNkara
guruguhAnanda



--------------------------------------------------------------------------------

Meaning:

pallavi: O resident of the town called Ranga! Victory to you who incarnated as Rama, the famed owner of the bow Kodanda! Brave scion of the Raghu clan!
anupallavi: Father of Cupid! One who is as swift as the King of Deers in running to the aid of the Gods to remove their sufferings! Giver of boons! Resident in the heart of Lakshmi! Scarlet hued one! One with Garuda as his mount! Unsurpassed in compassion! Ever present in good company!

caraNam: O Moon to the Ocean like Sun clan! Venerated lotus faced Rama, who was crowned as King! One whose feet are like lotus! Vanquisher of Cupid in beauty! Rama, of the clan of Raghu! Bridegroom of Sita who is on the left! Recliner on Sesha the great serpent! Delight of devotees! One with the Sun and Moon as two eyes! Soft spoken one! One with a forehead akin to an unblemished mirror! Destroyer of the sufferings of Sages! Govinda! Venkataramana! Mukunda! Sankarshana! Primordial root! Joy to Subrahmanya, the preceptor of Siva!

Tuesday, June 17, 2008

காணக் கண் கோடி வேண்டும் (4)

திரு.அர்த்தநாரீஸ்வரர் அவர்களின் உன்குழல் (YouTube) தொடுப்பு!



இங்குள்ள புழக்கடை சினிமாப் பார்க்க, இங்கே சொடுக்குக!

Sunday, June 8, 2008

பாலித்தீவில் இந்து வழிபாடு

பர்மாவில் முளைப்பாரி விழா

Tuesday, June 3, 2008

நா.கண்ணன் - நேர்காணல்





நன்றி |

ஜெயா தொலைக்காட்சி, சென்னை.

Sunday, June 1, 2008

வேங்கட ரங்கன் - பேட்டி

சுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் 'உத்தமம்' வேங்கடரங்கனைப் பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசியிருக்கிறார். அவருக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆயினும் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்திலேயே பேசிப்பழகியதால், தமிழில் கணினி மற்றும் செல்பேசி முன்னேற்றங்களைப் பேசுவதில் சிறு தயக்கமமிருப்பது தெரிகிறது, அவ்வளவு தான்!

ஊனம்!



A "MinTamil" posting by Chandrasekaran.J

Thursday, January 31, 2008

இசை ஆர்வலர் நடராஜன் (2)







நன்றி |

"குமுதம்"