Monday, October 13, 2008

உத்தரமேரூர் கோவில் புனரமைப்பு

இத்துடன் உத்தர்மேரூர் கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பற்றிய அறிமுக ஆவணப் படம் அனுப்பியுள்ளேன். இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் வரை அவற்றை ஒலியும் ஒளியுமாக ஆவணப் படுத்தி மக்கள் காண ஒலி/ஒளி பரப்ப உள்ளோம். இதன் கட்டுமான செலவு சுமார் 80000 அமெரிக்க டாலர்கள் மட்டுமே! தமிழ் கூறும் நன்மக்கள் இக்கோவிலுக்கான கொடையை பாரதி சொன்னது போல் , "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர், வாய் சொல் அருளீர்," என்று ரீச் பவுஃண்டேஷன் வணங்கி வேண்டிக் கொள்கிறது.

'நான்மறை ஓதும் சதுர் வேதி மங்கலமாம் உத்தரமேரூரின் ஈசான மூலையில் உள்ள இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டதும், ஊரில் செல்வம் குவியும், வளம் பெருகும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தமிழகத்தில் முழுதுமாய் எஞ்சியுள்ள பல்லவர் கோவிலில் இதுவும் ஒன்று. பல்லவ, சோழ, விஜயநகர, நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் மிக்க கோவில் இது. காலப் பெட்டகம். கோவிலோடு அந்த கல்வெட்டுக்களும், காலச் சின்னங்களும் அழிவதை நாம் தடுக்க வேண்டும்.

--
Regards
Chandrasekaran

To save culture & heritage visit:

www.conserveheritage.org
http://templesrevival.blogspot.com
http://reachhistory.blogspot.com


0 comments: