Saturday, September 7, 2013

கோவிலூர் ஆதீன அருங்காட்சியகம் - பகுதி 1

வணக்கம்.

சென்ற வாரம் வெளியிடப்பட்ட மண்ணின் குரல் விழியப் பதிவில் கோவிலூர் ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் பெய்யப்ப ஞான தேசிகருடன் நடத்தப்பட்ட பேட்டியின் முதல் பதிவினையும் இரண்டாம் பதிவினையும் அது தொடர்ந்து ஆலயம், மடம் ஆகியவை இருக்கும் சூழலையும் விளக்கும் விழியப்பதிவுகளை வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இங்கே அமைக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகத்தின் முழுப் பதிவு 2 பாகங்களாக வெளியிட உள்ளோம். அதன் முதல் பதிவு, 10 நிமிட விழியம் இன்று வெளியீடு காண்கின்றது.

மடத்தின் தொடக்கம், மடாதிபதிகள், மடத்தின் செயல்பாடுகள் என்னும் வகையிலும்,  செட்டிநாட்டு முக்கிய விஷயங்களை விளக்குவதாகவும்  இந்தப் பதிவு அமைந்திருக்கின்றது. இது ஏறக்குறைய 10 நிமிடங்கள் வரும் ஒரு பதிவு.



அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி  
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: