Monday, November 30, 2015

தமிழகத்திலிருந்து மலேசியா வரை..

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

மலேசியாவிலிருந்து தமிழகம் வரை....
.....நீண்ட பயணத்தின் சுவடுகள்.....


மலேசிய நிலப்பகுதிக்கான தமிழர்களின் புலம்பெயர்வு என்பது பன்னெடுங்காலமாக நிகழ்வது.  2000 ஆண்டுகளுக்கு முன்னான கடல் வணிகம், அதனோடு சேர்ந்த மதம் பரப்புதல் போன்றவை மலேசிய தீபகற்பத்தில் முக்கியத்தடங்களைப் பதித்துள்ளன. 15ம் நூற்றாண்டு வாக்கில் மலாக்கா துறைமுகம் உலக அளவில் கடல் வணிகத்திற்குப் புகழ் பெற்ற பகுதியாக விளங்கிய சமயத்தில் மலாக்கா வந்த தமிழ் வணிகர்கள் பலர் உள்ளூர் மலாய் பெண்களை மணந்து இங்கேயே தங்கி விட மலாக்கா செட்டிகள் என்ற புதிய சமுதாயம் ஒன்று உருவாகியது.  இப்படி பல தொடர்ச்சியான நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.

அதில் கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்னான புலம்பெயர்வு என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது.  இந்த விழியப்பதிவு தமிழர்களின் இந்தப் புலம்பெயர்வையும் இக்காலச் சூழலில் மலேசியத் தமிழர்களின் நிலையை விளக்குவதாகவும் உள்ளது.

ஏறக்குறைய 16 நிமிடப்  பதிவு இது.


யூடியூபில் காண:   https://www.youtube.com/watch?v=YZmDynmCu50&feature=youtu.be

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​