Saturday, October 7, 2017

நெசவுத்தொழிலும் கைத்தறியும்

வணக்கம்.



நெசவுத்தொழில் தமிழர் பண்பாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் கலை. இன்றோ பல்வேறு காரணங்களினால் நெசவுத்தொழில் புகழ் மங்கி வருகின்றது. இளம் தலைமுறையினர் வெவ்வேறு துறைகளில் தங்கள் ஆர்வத்தைத் செலுத்தத் தொடங்கி விட்டமையால் கைத்தறி போடுதல் என்னும் கலை இன்று படிப்படியாகக் குறைந்து மறைந்து போவது நிகழ்கின்றது.

சாயர்புரத்தில் உள்ள ஓரிரு நெசவுத் தொழிற்சாலைகள் மட்டும் சில தறி இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. ஆண்களும் பெண்களுமாக பாகுபாடினிறி இத்தொழிலைச் செய்கின்றனர். கையால் போடும் தறி மட்டுமன்றி இன்று இயந்திரத்துடன் இயங்கும் நெசவு இயந்திரங்களும் வந்து விட்டன. இவை ஒரு கைத்தறி சேலையோ கலியோ துண்டோ தயாரிக்கப்படும் நேரத்தை விரைவாக்குகின்றன.

சாயர்புரத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் முன்னர் ஒரு நெசவுத்தறி இருந்திருக்கின்றது. ஆனால் இன்றோ ஒரு சில வீடுகளில் அவை செயல்படுத்தப்படாத சூழல் இருப்பதால் குழியை மூடி நெசவு இயந்திரத்தை எடுத்து விட்டனர். ஒரு சில இல்லங்களில் வாசல் பகுதிகளில் இன்றும் நெசவுத் தறிகள் உள்ளன.

கைத்தறி ஆடைகள் நவநாகரிக உலகிற்குப் பொருந்தாது என நினைப்பதும் தவறு. உடலுக்கு ஏற்ற ஆடையாக கத்தறி ஆடைகள் திகழ்கின்றன. பார்ப்பதற்குக் கவர்ச்சியான வர்ணங்களில் கைத்தறி சேலைகளும் ஏனைய துணி வகைகளும் இன்று நமக்குக் கிடைக்கின்றன.

கைத்தறி ஆடைகளை வாங்கி அணிவோம்.

நெசவுத் தொழில் கிராமங்களில் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இதனைத் தக்க வைப்பதற்கும் இக்கலை மீண்டு புத்துணர்ச்சி பெற்று வளர்வதற்கும் வழி வகைகளைச் செய்வோம்.



இப்பதிவினைச் செய்ய உதவிய சாயர்புரம் திரு.மைக்கல், ஐயா வாரியார், அவர் துணைவியார் மற்றும் சாயர்புரத்தைச் சேர்ந்த அன்பர்கள் அனைவருக்கும்   தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: