Tuesday, October 14, 2014

செங்கல் தயாரிப்பு (திருப்பாச்சேத்தி)

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை. தமிழர் கட்டிடக் கட்டுமானத் துறையில் முக்கியாங்கம் வகிக்கும் ஒரு அடிப்படைத் தொழில் இது. மதுரைக்கு அருகே இருக்கும் மானாமதுரை, திருப்பாச்சேத்தி ஆகியபகுதிகளில் செங்கல் தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகின்ரன. குடிசைத் தொழில் என்ர நிலையிலும், சிறு வணிகம் என்ற நிலையிலும், விரிவான வர்த்தக நோக்கத்துடனும் என பலவகையில் இத்தொழில் இப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.


  

யூடியூபில் இப்பதிவைக் காண:      https://www.youtube.com/watch?v=ihSdjPC30uA

இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.


இப்பதிவினை இவ்வருடம் ஜூன் மாதம் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இதன் பதிவிற்கு உதவிய திரு நாகரத்தினம் அவர்களுக்கு (முனைவர் காளைராசனின் சகோதரர்) நமது பிரத்தியேகமான நன்றி.

பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!


முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: