Friday, December 5, 2014

புவியியல் அருங்காட்சியகம் - பெசண்ட் நகர்

வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.

அருங்காட்சிகங்கள் பல வகை. புவியல் ஆய்வுகள், அதன் சான்றுகள் ஆகியனவற்றை உள்ளடக்கிய அருங்காட்சியகங்கள் உலகின் பல நாடுகளில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குப் புவியல் தொடர்பான ஆய்வுத் தகவல்களை வழங்கும் சேவையைச் செய்கின்றன.

தமிழகத்தில் பெசண்ட் நகரில் அமைந்திருப்பது Geological Survey of India. இதன் டைரக்டராகப் பணிபுரிந்து வரும் திரு.எஸ்.சிங்காநெஞ்சன் அவர்கள் நம் மின்தமிழ் குழுமத்திலும் இருப்பது நமக்கு பெருமை.

இவரது கடின உழைப்பின் பலனாக இந்தஅருங்காட்சியகம் மிகச் சிறப்பாக வடிவம் கொண்டிருப்பதை நேரில் இங்கு சென்று காண்பவர்கள் உணரலாம்.

இவ்வாண்டு ஜூன் மாதம் நான் தமிழகத்தில் இருந்த சமயம் தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களோடு இணைந்து இந்த அருங்காட்சியகம் சென்றிருந்தோம். அங்கு திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் இந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் சேகரங்களைப் பற்றிய முழு தகவல்களை வழங்கினார்கள். நண்பர் ஒரிசா பாலுவும் எங்களோடு இணைந்திருந்ததால் மேலும் கடலாய்வு தொடர்பான தகவல்களும் இந்தப் பதிவில் இணைந்தன.

நான் முதற்பகுதி வீடியோவை பதிவாக்கம் செய்ய, ஏனைய பகுதிகளை எனக்காக உதயன் பதிவு செய்தார்.

புகைப்படங்களைத் தொடர்ந்து இதே இழையில் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்த விழியப் பதிவில் திரு. சிங்காநெஞ்சன் அவர்கள் தரும் விளக்கம் மிகச் சிறப்பாக உள்ளது. அனைவரும் கேட்டும் பார்த்தும் மகிழுங்கள்.

இந்த அருங்காட்சியகம்செல்ல விரும்புவோருக்குக் கீழ்க்காணும் முகவரி உதவும்.

S.SINGANENJAM,
DIRECTOR,
GEOLOGICAL SURVEY OF INDIA,
A-2-B, RAJAJI BHAVAN, BESNAT NAGAR,
CHENNAI-600 090


யூடியூபில் இப்பதிவைக் காண:  https://www.youtube.com/watch?v=-ijymfDxPBk&feature=youtu.be

இப்பதிவு ஏறக்குறைய 18 நிமிடங்கள் கொண்டது.


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

0 comments: